search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குறைதீர் கூட்டம்"

    • மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளி சங்கங் களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் 29-ந் தேதி காலை நடக்கிறது.
    • நேரிலோ அல்லது பாதுகாவலர் மூலமாகவோ விண்ணப்பித்து பயன்பெறலாம் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

    தேனி:

    தேனி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளி சங்கங்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் 29-ந் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடத்தப்படவுள்ளது.

    இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் சங்கங்கள் தங்கள் கோரிக்கை தொடர்பான மனுக்களை அளித்து பயன் பெறலாம். மனு அளிக்க விரும்பும் மாற்றுத்திறனாளிகள் தங்களது மாற்றுத்திறனாளி அடையாள அட்டை நகல்,

    குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், புகைப்படம்- 1 உடன் நேரிலோ அல்லது பாதுகாவலர் மூலமாகவோ விண்ணப்பித்து பயன்பெறலாம் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

    • விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 24-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
    • விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று அவர்களின் குறைகளை கேட்டு நடவடிக்கை எடுக்க உள்ளார்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாமக்கல் மாவட்டத்தில் நவம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 24-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் உமா தலைமை வகித்து விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று அவர்களின் குறைகளை கேட்டு நடவடிக்கை எடுக்க உள்ளார். எனவே இக்கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்களது பயிர் சாகுபடிக்குத் தேவையான நவீன தொழில்நுட்பங்கள், வேளாண் இடு பொருள் இருப்பு விவரங்கள், வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் இதர துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் மானியத் திட்டங்கள் குறித்து அறிந்து கொள்வதுடன் தங்களது கோரிக்கை களையும் தெரிவித்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 24-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. 

    • நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை கூட்டம் நடைபெற உள்ளது.
    • மின் நுகர்வோர் தங்களுக்கு எதேனும் குறைகள் இருந்தால் தெரிவிக்கலாம்.

    கும்பகோணம்:

    கும்போணத்தில் மின்நுகர்வோர் குறைதீர் நாள் கூட்டம் நாளை 9-ந்தேதி (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது.

    இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக கும்பகோணம் செயற்பொறியாளர் திருவேங்கடம் வெளியிட்டு ள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:-

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் கும்பகோணம் செயற் பொறியாளர் அலுவலகத்தில் இக் கூட்டத்தை மேற்பார்வை பொறியாளர் நளினி நாளை வியாழக்கிழமை முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை நடத்தவுள்ளார்.

    இதில் கும்பகோணம் நகரம், கும்கோணம் புறநகர், பாபநாசம் நகரம், பாபநாசம் புறநகர், கபில்தலம், அய்யம்பேட்டை நகரம், அய்யம்பேட்டை புறநகர், திருக்கருகாவூர் கணபதிஅக்ரஹாரம், பட்டீஸ்வரம், சுவாமிமலை, திருப்புறம்பியம் பிரிவு அலுவலக பகுதியைச் சார்ந்த மின் நுகர்வோர் தங்களுக்கு எதேனும் குறைகள் இருந்தால் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாற்றுதிறனாளிகளுக்கான சிறப்பு குறைத்தீர்க்கும் கூட்டம் நடக்கிறது.
    • கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் அளித்து தீர்வு கண்டு பயன்பெறலாம் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் மேற்கு வட்டம், ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவல கத்தில் வருகிற 20-ந் தேதி காலை 10 மணிக்கு மாற்றுதிறனாளிகளுக்கான சிறப்பு குறைத்தீர்க்கும் கூட்டம் திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது.

    இந்த கூட்டத்தில் திண்டு க்கல் மேற்கு வட்ட த்தைச் சேர்ந்த அனைத்து வகை மாற்றுத்திறனாளி களும் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் அளித்து தீர்வு கண்டு பய ன்பெறலாம் என மாவட்ட கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

    • தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், திருநங்கைகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது.
    • பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினார்.

    தேனி:

    தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், திருநங்கைகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை யின்படி திருநங்கைகளு க்கான குறைகளை நிவர்த்தி செய்திடவும் அவர்களுக்கு ஏற்படும் குறைகளை தீர்த்து வைப்பதற்காக மாதந்தோறும் குறைதீர்க்கும் முகாம் நடத்திட உத்தரவிட ப்பட்டது.

    அதன்படி திருநங்கை களுக்கான குறைதீர்க்கும் முகாம் ஒவ்வொரு மாதமும் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற முகாமில் திருநங்கைகள் பலர் கலந்து கொண்டனர். வீட்டு மனை, கல்வி கடன், அடையாள அட்டை, சுய தொழில் தொடங்க கடன், திருநங்கை அடையாள அட்டையில் முகவரி மாற்றம் செய்து தரக்கோருதல் என பல்வேறு விதமான கோரிக்கை அடங்கிய மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் வழங்கினர். பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினார்.

    • சிவகங்கையில் மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது.
    • மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன் உள்ளிட்ட அனைத்துதுறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜித் தலைமையில் நடந்தது.

    இந்த கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை, மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித் தொகை, மாற்றுத்திறனா ளிகளுக்கான உபகர ணங்கள், புதிய மின்னணு குடும்ப அட்டை போன்ற பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி, பொது மக்களிட மிருந்து 577 மனுக்கள் பெறப்பட்டு தகுதியுடைய மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார்.

    இக்கூட்டத்தில், வேளாண்மைத்துறையின் சார்பில் மானாமதுரை, திருப்புவனம் வட்டத்திற்குட் பட்ட 4 பயனாளிகளுக்கு ரூ.10,084 மதிப்பீட்டிலான மானியத்தொகையுடன் கூடிய வேளாண் இடுபொ ருட்களையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் மதகுபட்டி பைரவர் சுய உதவிக்குழுவிற்கு ரூ.2 லட்சம் மதிப்புள்ள கடனுதவி வழங்கப்பட்டது.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன் உள்ளிட்ட அனைத்துதுறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • மேற்பார்வை பொறியாளர் நளினி தலைமையில் நாளை குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.
    • நட்சத்திரா நகர், நாஞ்சிக்கோட்டை ஆகிய பகுதிகளை சார்ந்த மின் நுகர்வோர்கள் ஏதேனும் குறைகள் இருந்தால் நேரில் வந்து மனு அளிக்கலாம்.

    தஞ்சாவூர்,

    தஞ்சை மின்வாரிய செயற்பொறியாளர் மணி வண்ணன் வெளியி ட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சாவூர் நீதிமன்ற சாலையில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது.

    மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் நளினி தலைமையில் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை இந்த குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.

    இதில் தஞ்சாவூர் நகரிய கோட்டத்திற்கு உட்பட்ட நகர எல்லையான தெற்கு வீதி, வடக்கு வீதி, மேல வீதி, கரந்தை, பள்ளி அக்ரஹாரம், கீழவாசல், தொல்காப்பியர் சதுக்கம், மேரீஸ் கார்னர், அருளானந்த நகர், பர்மா காலனி, நிர்மலா நகர், யாகப்பா நகர், அருளானந்தம்மாள் நகர், பழைய வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு, காந்திஜி சாலை, மருத்துவக் கல்லூரி சாலை, நீலகிரி, மானோஜிபட்டி, ரஹ்மான் நகர், ரெட்டிபாளையம் சாலை, சிங்கபெருமாள் கோவில், ஜெபமாலைபுரம், வித்யா நகர், மேல வெளி ஊராட்சி, தமிழ்ப் பல்கலைக்கழகக் குடியிருப்பு வளாகம், மாதாகோட்டை சாலை, புதிய பேருந்து நிலையம், திருவேங்கட நகர், இனாத்துக்கான்பட்டி, நட்சத்திரா நகர், நாஞ்சிக்கோட்டை ஆகிய பகுதிகளை சார்ந்த மின் நுகர்வோர்கள் ஏதேனும் குறைகள் இருந்தால் நேரில் வந்து மனு அளிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாதாந்திர சமயைல் கியாஸ் நுகர்வோர்கள் குறைதீர் கூட்டம் வருகிற 26-ந் தேதி (செவ்வாய்க் கிழமை) மாலை 4 மணிக்கு நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
    • மாவட்ட வருவாய் அலுவலர் சுமன் நிகழ்ச்சிக்கு தலைமை வகிக்கிறார்.

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பாதவது:-

    நாமக்கல் மாவட்டத்தில் சமையல் கியாஸ் நுகர்வோர்கள் நலன் கருதி, அனைத்து எண்ணெய் மற்றும் கியாஸ் நிறுவன மேலாளர்கள், கியாஸ் கம்பெனி ஏஜெண்டுகள், விநியோகஸ்தர்கள், சமையல் கியாஸ் நுகர்வோர்கள், தன்னார்வலர்கள் ஆகி யோர்க ளுடன், மாதாந்திர சமயைல் கியாஸ் நுகர்வோர்கள் குறைதீர் கூட்டம் வருகிற 26-ந் தேதி (செவ்வாய்க் கிழமை) மாலை 4 மணிக்கு நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. மாவட்ட வருவாய் அலுவலர் சுமன் நிகழ்ச்சிக்கு தலைமை வகிக்கிறார். சமையல் கியாஸ் விநியோகம் தொடர்பான குறை பாடுகள் மற்றும் கோரிக்கைகளைத் தெரிவிக்க விரும்பும் நுகர்வோர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு சமையல் கியாஸ் விநியோகம் மற்றும் கோரிக்கைகள் குறித்து மனுக்களை அளித்து தீர்வு பெறலாம் என அதில் கலெக்டர் கூறியுள்ளார்.

    • நுகர்வோர் குறைதீர் கூட்டம், நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், நாளை (21-ந் தேதி) பகல் 12.30 மணிக்கு நடைபெற உள்ளது.
    • மாவட்ட கலெக்டர் உமா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து நுகர்வோர்களின் குறைகளை கேட்டறிகிறார்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாமக்கல் மாவட்டத்தில் நுகர்வோர்களின் நலன் கருதி, அனைத்து துறையின் முதல்நிலை அலுவலர்கள், தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள் ஆகியோர்களுடன், காலாண்டு நுகர்வோர் குறைதீர் கூட்டம், நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், நாளை (21-ந் தேதி) பகல் 12.30 மணிக்கு நடைபெற உள்ளது. மாவட்ட கலெக்டர் உமா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து நுகர்வோர்களின் குறைகளை கேட்டறிகிறார். பொது விநியோகத் திட்டம் தொடர்பான கோரிக்கைகளைத் தெரிவிக்க விரும்பும் நுகர்வோர்கள் மேற்படி கூட்டத்தில் கலந்து கொண்டு மனுக்களை அளிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    • கருகி வரும் குறுவை பயிரை காப்பாற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • பாதுகாப்பு நடவடிக்கையில் போலீசார் ஈடுப்பட்டுள்ளனர்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான விவசாயிகள் மற்றும் வேளாண்துறை வருவாய்த்துறை பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல்வேறு துறையைச் சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இந்நிலையில் கூட்டம் தொடங்கியவுடன் விவசாயிகள் டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் அடுத்த 15 தினங்களுக்கு 5000 கன அடி வீதம் கர்நாடக அரசு காவிரியில் இருந்து தண்ணீர் கொடுக்க வேண்டும் என உத்தரவிட்ட பிறகும் தண்ணீர் திறந்து விட முடியாது என கர்நாடக முதல்வர் தெரிவித்துள்ளார். இதற்கு தமிழகத்தில் விவசாயிகள் மத்தியில் கடும் கண்டனம் எழுந்துள்ளது.

    இந்நிலையில் இன்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தண்ணீரை கொடுக்க மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து விவசாயிகள் கூட்டத்தை புறக்கணிப்பு செய்து வெளிநடப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவின்படி தமிழகத்திற்கு தண்ணீரை கர்நாடக அரசு உடனடியாக திறந்து விட வேண்டும் தண்ணீரை பெற்று தருவதற்கான நடவடிக்கையை மத்திய மாநில அரசுகள் எடுக்க வேண்டும், கருகி வரும் குறுவை பயிரை காப்பாற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்,

    சம்பா சாகுபடியை தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதே கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நாகை தஞ்சாவூர் மாவட்டங்களில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. பாதுகாப்பு நடவடிக்கையில் போலீசார் ஈடுப்பட்டுள்ளனர்.

    • உய்யக்கொண்டான், புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் தண்ணீர் திறந்து விட வேண்டும்.
    • கரும்புக்கு சிறப்பு ஊக்க ஊதியமாக டன் ஒன்றுக்கு ரூ.195 வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது.

    தஞ்சாவூர்,:

    தஞ்சையில் இன்று கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

    இதற்கு வருவாய் கோட்டாட்சியர் ( பொ) பழனிவேல் தலைமை தாங்கினார். இதில் கோட்ட அளவிலான விவசாயிகள் கலந்து கொண்டு மனுக்கள் அளித்தனர்.

    அப்போது விவசாய தொழிலாளர் சங்க துணை தலைவர் ஜீவக்குமார் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது :-

    தமிழகத்திற்கு உரிய தண்ணீர் வழங்காமல் கர்நாடக அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. மத்திய அரசும் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இந்த செயல்களால் தமிழகத்திற்கு நியாயமான முறையில் கிடைக்க வேண்டிய தண்ணீர் கிடைக்காமல் உள்ளது.

    இதனால் காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை பாசனத்திற்கு உரிய தண்ணீர் இல்லாமல் பயிர்கள் வாடி வருகின்றன.

    இதனால் அடுத்து சம்பா சாகுபடியும் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே சம்பா சாகுபடிக்கு சிறப்பு தொகுப்பு திட்டத்தை அரசு அறிவிக்க வேண்டும்.

    இதேபோல் பயிர் காப்பீடு திட்டத்தை தொடங்க வேண்டும். உய்யக்கொண்டான் ,புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் தண்ணீர் திறந்து விட வேண்டும். மின்சாரம், உர தட்டுப்பாடு இருக்கக் கூடாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் கோவிந்தராஜ் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    கரும்புக்கு சிறப்பு ஊக்க ஊதியமாகடன் ஒன்றுக்கு ரூ.195 வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது. ஆனால் இதற்கான அரசாணை இன்னும் வெளியிடப்படாமல் உள்ளது.

    எனவே வருகிற 25ஆம் தேதி முதல் -அமைச்சர் நாகை மாவட்டத்திற்கு வர உள்ளார்.

    அதற்கு முன்னதாக அரசாணை வெளியிட வேண்டும். கார்த்திகைப் பட்டத்தில் விவசாயிகள் நிலக்கடலை சாகுபடி செய்ய உள்ளதால் தரமான நிலக்கடலை விதைகள் வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

    பாசனதாரர் விவசாய சங்க தலைவர் தங்கவேல் அளித்துள்ள மனுவில், மேட்டூர் அணை திறக்கப்பட்டு 70 நாட்கள் ஆகியும் கடமடை பகுதிக்கு தண்ணீர் சென்று சேரவில்லை.

    குறுவை சாகுபடி செய்யப்பட்டு அடுத்து சம்பா சாகுபடி செய்ய ஆயத்தமாக உள்ள நிலையில் இன்னும் இரண்டு வாரத்திற்குள் நீர் பாசன பெற்றால் சாகுபடி செய்ய ஏதுவாக இருக்கும்.

    சம்பா சாகுபடிக்கு ஏற்றவாறு தண்ணீர் முறை வைக்காமல் நீர் விட வேண்டும்.

    கல்லணை கால்வாய் பிரிவில் மூன்றாயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்ப ட்டால் கடைமடை பகுதிக்கு நீர் வர வாய்ப்பாக இருக்கும்.

    எனவே இதுகு றித்து அதிகாரி கள், விவசா யிகள் குழு அமைத்து நேரடி ஆய்வு செய்து முடிவு செய்ய வேண்டும் என்று குறிப்பி டப்ப ட்டுள்ளது.

    • நாளை மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடை பெறுகிறது.
    • திருக்காட்டுப்பள்ளி, நடுக்காவேரி ஆகிய பகுதி அலுவலகத்தைச் சேர்ந்த மின் நுகர்வோர் தங்களது குறைகளை கூட்டத்தில் நேரில் வந்து தெரிவிக்கலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மின்வாரிய பொறியாளர் அலுவலகம் வல்லம் சாலையில் நாளை 3-ந்தேதி (வியாழக்கிழமை) மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் காலை 11 மணி முதல் மாலை 1 மணி வரை நடை பெற உள்ளது.

    எனவே வல்லம், மின் நகர், செங்கிப்பட்டி, வீரமர சன்பேட்டை, கள்ளப்பெ ரம்பூர், திருக்கானூர் பட்டி, வடக்கு தஞ்சாவூர், புறநகர் திருவையாறு, நகர் திருவையாறு, புறநகர் திருக்காட்டுப்பள்ளி, நகர் திருக்காட்டுப்பள்ளி, நடுக்காவேரி ஆகிய பகுதி அலுவலகத்தைச் சேர்ந்த மின் நுகர்வோர் தங்களது குறைகள் ஏதும் இருப்பின் இந்த குறைதீர் கூட்டத்தில் நேரில் வந்து தெரிவிக்கலாம்.

    இத்தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் கலை வேந்தன் தெரிவித்துள்ளார்.

    ×